ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் செயல்முறைகள் | உள்ளுர் விடுமுறை - துளிர்கல்விசெய்தி

Latest

Search This Blog

Saturday, July 31, 2021

ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் செயல்முறைகள் | உள்ளுர் விடுமுறை

ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் செயல்முறைகள் பிறப்பிப்பவர் : திரு. ஹெச். கிருஷ்ணானுண்ணி, இ.ஆ.ப., கா.மு.அ.597/2021/08 நாள்.31.07.2021 

பொருள் : 

விடுமுறை - உள்ளுர் விடுமுறை - ஈரோடு மாவட்டம் - ஈரோடு வட்டம் - அரச்சலூர் கிராமம் - ஓடாநிலையில் சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவு (ஆடித் திங்கள் 18) நாளினை திருவிழாவை முன்னிட்டு 03.08.2021 (செவ்வாய்க்கிழமை) உள்ளூர் விடுமுறையாக அறிவித்து ஆணையிடப்படுகிறது. 

1. அரசாணை (1டி) எனர். 159, பொது (பல்வகை)த்துறை, நாள்.28.09.2007 2. அரசாணை (நிலை) எண்.154 பொது (பல்வகை)த் துறை நாள் : 03.09.2009. பார்வை : 

ஆணை: 

ஈரோடு மாவட்டம், சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவு தினம் ஆடித்திங்கள் 18-ம் நாளான 03.08.2021 செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்படுவதால், பார்வை 01-இல் காணும் அரசாணையின்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளித்து ஆணையிடப்படுகிறது. 

02), உள்ளூர் விடுமுறை நாளான 03.08.2021 செவ்வாய்க்கிழமை அன்று அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு ஈரோடு மாவட்டத்திலுள்ள கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்களில் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்பட வேண்டியது எனவும் ஆணையிடப்படுகிறது. 

03). இந்த விடுமுறை செலாவணி முறிச்சட்டம் 1881 (under. Negotiable Instruments Act 1881)-ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால், வங்கிகளுக்கு இவ்விடுமுறை பொருந்தாது. 

04). இவ்விடுமுறையை ஈடு செய்யும் பொருட்டு, ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு 14.08.2021 சனிக்கிழமை அன்று பணி நாளாக அறிவிக்கப்படுகிறது. 

ஒம்./- ஹெச். கிருஷ்ணனுண்ணி, மாவட்ட ஆட்சித்தலைவர், ஈரோடு. /உண்மை நகல் /உத்தரவுப்படி/ மாவட்ட ஆட்சித்தலைவருக்காக, பெறுநர்: அனைத்து துறை அலுவலர்கள், ஈரோடு மாவட்டம். நகல்: அ8 இருப்புக் க�

No comments:

Post a Comment