தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்
எண். 208/2, ஜவஹர்லால் நேரு சாலை, அரும்பாக்கம், சென்னை 600 106
தொலைபேசி எண்: 2363 5011 நிகரி: 2363 8282
மின்னஞ்சல் - tnsec.tn@nic.in இணையதளம் - www.tnsec.tn.nic.in
செய்தி வெளியீடு
செய்தி வெளியீடு :30/2021
நாள்: 27.09.2021
ஊரக உள்ளாட்சித் தேர்தல் - 2021
அனுமதியின்றி பயன்படுத்தப்படும் அனைத்து ஒலிபெருக்கிகளும்
பறிமுதல் செய்யப்படும் - தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிபேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம்,
கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் நடைபெறவுள்ள
ஊரக உள்ளாட்சித் தேர்தல் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடைபெற்றிடவும், தேர்தல்
நடத்தை விதிகளின்படி
தேர்தல்
காலங்களில் ஒலிபெருக்கிகள் போன்றவற்றை
பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் பயன்படுத்தவும், முறைப்படுத்தவும் பின்வரும்
கட்டுப்பாடுகளை விதித்து தமிழ்நாடு
மாநில தேர்தல் ஆணையம் ஆணைகள்
வெளியிட்டுள்ளது.
* தேர்தல் நாள் அறிவிக்கப்பட்டதிலிருந்து தொடங்கி தேர்தல் நடைபெறும் நாள் வரை,
தேர்தல் பிரச்சாரங்களுக்காக எந்தவொருவகை வாகனங்களிலும்
பொருத்தப்பட்டிருக்கும் ஒலிபெருக்கிகளை காலை 6 மணியிலிருந்து இரவு 10 மணி
வரை மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்படுகின்றது.
* யாதொரு பொதுக் கூட்டங்களுக்கு அல்லது ஊர்வலங்களுக்கு ஒலிபெருக்கிகளை
பயன்படுத்த வேண்டுமாயின் காவல்துறையின் எழுத்து மூலமான முன் அனுமதி
பெறவேண்டும்,
* மேலும் ஒலிபெருக்கிகளை
பொது
அமைதிக்கு இடையூறு ஏற்படாதவாறு
அனுமதிக்கப்பட்ட காலை 6 மணியிலிருந்து இரவு 10 மணி வரை மட்டுமே பயன்படுத்த
வேண்டும்.
* மேற்சொன்னவாறு வரையறுக்கப்பட்ட நேரங்களுக்கு அப்பாலும் அல்லது சம்பந்தப்பட்ட
அதிகாரிகளின் எழுத்து மூலமான அனுமதியின்றி பயன்படுத்தப்படு அனைத்து
ஒலிபெருக்கிகளும்,
No comments:
Post a Comment