தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழை பயிற்று மொழியாக அறிவிக்க கோரிய வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது.
தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் செல்வகுமார், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், 'மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தாய்மொழி புறக்கணிக்கப்படுகிறது. தமிழக கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழை கட்டாய பாடமாக்க வேண்டும்,' எனக் குறிப்பிட்டிருந்தார். இதற்கு மத்திய அரசு தரப்பில், கேந்திரிய வித்யாலயாவில் தமிழ் விருப்பப் பாடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து நீதிபதிகள் கூறுகையில், 'கேந்திரிய வித்யாலயாவில் தமிழ் பாடம் உள்ளது. ஆனால் அங்கு தமிழ்வழி கல்வி தேவை என உரிமை கோர முடியாது. தமிழ்வழியில் படிக்க விரும்பினால் அப்பள்ளிகளுக்கு ஏன் செல்ல வேண்டும்,' என கேள்வி எழுப்பி, தீர்ப்பை ஒத்திவைத்தனர். இந்நிலையில், இந்த வழக்கினை தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் இன்று (டிச.,02) உத்தரவிட்டனர்.
Search This Blog
Thursday, December 2, 2021
New
கேந்திரிய வித்யாலாயாவில் தமிழ் பயிற்று மொழி; வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம்
About thulirkalviseithi
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
Kendiriya School
Tags:
Kendiriya School
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment